கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு.!!
தலைமன்னார் பழைய பாலம் தென் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை அவதானித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள், தலைமன்னார் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு விரைந்த தலைமன்னார் பொலிஸார், சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர். அதோடு, சம்பவம் தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed